2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடாப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று மின்கம்பத்துடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியானதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த குருகுலசிங்கம் கோகுள்தாஸ் (வயது 28) என்பவர் விபத்தில் பலியான அதேவேளை,  கொக்கட்டிச்சோலையை சேர்ந்த கந்தசாமி குலேந்திரன் (வயது 26) என்பவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .