2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டு.மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                      (ஜிப்ரான்)

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று காலை மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களிடம் கையளிக்கப்பட்டதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்கா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 19 தபால் நிலையங்களூடாகவும் 29 உபதபால் அலுவலகங்களூடாகவும் இவ்வாக்காளர் அட்டைகள் நாளை முதல் விநியோகக்கப்படவுள்ளதாக மாவட்ட தபால் அத்தியட்சகர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.

கதிரவெளி, செங்கலடி, துறைநீலாவணை, படுவான்கரை என நான்கு வலயங்களுடாக  தபால் நிலையங்களுக்கு வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்தில் 347,099 வாக்காளர் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .