2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வட, கிழக்கில் யுத்தம் நிலவ வேண்டும் என்பதே சம்பந்தனின் எதிர்பார்ப்பு: மஹிந்தானந்த

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சிஹாரா லத்தீப்)

'நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட்டு தமிழ் மக்கள் துயரப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனதும் அக்கட்சியினரதும் தேவையாகும்' என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

'இவ்வாறானதொரு நிலைமை காணப்பட்டாலேயே புலம்பெயர் தமிழர்களின் பெருந்தொகைப் பணம் மாதாந்தம் இவர்களுக்கு கிடைக்கும். எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெற்றிருந்த  நிம்மதியான அபிவிருத்தி மிகுந்த ஆட்சியினை பாதுகாக்க கிழக்கு தமிழ் மக்கள் முன்வர வேண்டும்' என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தமிழில் உரையாற்றினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .