2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 25 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன், எம்.சசிகுமார்

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இளம் உள்ளங்களுக்கான ஆன்மீக சுகம் எனும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை வேலைத்திட்டத்தின் ஊர்வலமொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு, ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், மாவட்டத்திலுள்ள இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த சமயங்களைச் சேர்;ந்த மத பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி திருமதி எஸ்.கலாராணி, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் உட்பட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்டத்தின் ஊர்வலம், நந்தகோபன் மண்டபம் வரை சென்றது. இதையடுத்து இளைஞர் யுவதிகளுக்கான ஆன்மீக உரைகளும் சமயப் பிரமுகர்களினால் நிகழத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .