2026 மே 04, திங்கட்கிழமை

அமைச்சர் மைத்திரியின் மகனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Super User   / 2013 மார்ச் 04 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம்.முர்சீத்

பிரதி பொலிஸ் மா அதிபர் வைத்தியலங்காரவின் மகன் அசேல தாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகனுக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் வைத்தியலங்காரவின் மகன் ஆகியோருக்கு இடையிலான கைகலப்பு கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி பாசிக்குடாவிலுள்ள ஹோட்டலில் இடம்பெற்றது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் எட்டாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் சார்பாக பிரதி அமைச்சர் பைஸர், லலித் திசாநாயக்க, என்.எம்.சஹீட் உட்பட சுமார் 15 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • jesmin Monday, 04 March 2013 09:06 AM

    பெரும்பான்மையினர் பள்ளிவாயல்களை நொருக்கும் பணியில் ஈடுபட்டு வருவது எமது அரசியல்வாதிகளுக்கு இன்னும் தெரியாமல் உள்ளது வருத்தமாக உள்ளது. பதவி மோகத்தால் அவர்களை காப்பாற்ற எங்கிருந்தெல்லாம் ஓடி வருகின்றார்கள்

    Reply : 0       0

    vallarasu Monday, 04 March 2013 11:51 AM

    இந்த்த முஸ்லிம் சட்டத்தரணிகள் எல்லாம் காசுக்காக எதுவும் செய்வார்கள்.... -ஜெஸ்மின்

    Reply : 0       0

    avathanee Monday, 04 March 2013 05:14 PM

    இதுதான் இலங்கையின் நிலை.. முஸ்லிம்களின் நிலையோ மிகவும் பரிதாபம்.. இவர்களை முஸ்லிம் என்று சொல்ல வெட்கமாக உள்ளது.. மறுமையை மறந்து வாழ்கிறார்கள்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .