2026 மே 04, திங்கட்கிழமை

மாணவர்களுக்கிடையிலான கைகலப்பில் ஒருவர் காயம்

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் முதலாம் வருட மாணவர் ஒருவர் காயமடைந்து  செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் உணவு பெற்றுக்கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றபோது இரண்டாம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0

  • vallarasu Monday, 11 March 2013 06:45 AM

    இவங்களுக்கு தலைமத்துவ பயிற்சி 14 நாட்கள் போதாது.3மாதம் கொடுக்கவேன்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .