2026 மே 04, திங்கட்கிழமை

திறக்கப்படாத மீன்பிடி இறங்குதுறையின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


டி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் நிர்மாணக்கப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதுறையின் எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக திறக்கப்படால் உள்ளதாக கடல்தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ் எரிபொருள் நிரப்பு நிலையம் இவ்வாறு பாவனையில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதால்; துருப்பிடித்து அழிவடையும் நிலையில் காணப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இபாட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கடற்றொழில் அமைச்சினால் அமைக்கப்பட்ட பாரிய கொள்கலன்களே இவ்வாறு அழிவடைந்து வருகின்றன.

இது தொடர்பாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜிடம் கேட்டபோது, 'இம்மாத இறுதிக்குள் இவ் எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்படவுள்ளது' என்று பதிலளித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .