2026 மே 04, திங்கட்கிழமை

கல்குடா வலயப் பாடசாலைகளில் கைப்பேசி பயன்பாட்டை தடைசெய்யக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முற்றாக தடைசெய்யுமாறு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

கல்குடா வலயத்திலுள்ள 83 பாடசாலைகளுக்கும் இப்பாடசாலைகளின் அதிபர்களுக்கும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இது தொடர்பான கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு செல்வது மற்றும் பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியை பாவிப்பது முற்றாக தடைசெய்யப்படுகின்றது.  இருப்பினும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு கையடக்கத் தொலைபேசியை கொண்டு வந்தால் அல்லது மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியை பாவிப்பதை கண்டால் அம்மாணவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்குமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறே, பாடசாலை நேரங்களில் வகுப்புக்களில் ஆசிரியர்களும் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறியுள்ளதாகவும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

  Comments - 0

  • vallarasu Friday, 19 April 2013 11:34 AM

    ஐய்யா உங்கள் ஆசிரியர்களை முதலில் தடை செய்யுங்கள், பின் மாணவர்கள் தானாக திருந்துவார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .