2026 மே 04, திங்கட்கிழமை

சேத்துக்குடாவில் சகல வசதிகளுடனும் கூடிய பூங்கா அமைக்க பணிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, சேத்துக்குடாவில் சகல வசதிகளுடனும் கூடிய பூங்கா ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்த அதிகார சபைக்கு மட்டக்களப்பு தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு சேத்துக்குடா வாவியில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் வீதியினை அண்டிய நிலப்பரப்பினைப் பயன்படுத்தி அப்பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு ஸ்தானமாகவும், இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய இடமாகவும் அப்பிரதேசத்தை மீளவடிவமைத்து பூங்கா ஒன்றுடனான பொழுதுபோக்கு இடமாக இவ்விடம் அமைக்கப்பட வேண்டும்.

நவீனமயமாக்கலின் கீழ் அமைக்கப்பட இருக்கின்ற இந்த பூங்கா, சேத்துக்குடா, விச்சுக்கல்முனை, புதுநகர் மற்றும் திமிலைதீவு அகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய வகையில் அமையும்.

இப்பூங்காவிற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளருக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டள்ளது.

மிக விரைவில் இதை நவீன மயப்படத்தப்பட்ட பூங்காவாக அமைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  Comments - 0

  • Thiruchelvam,V Sunday, 21 April 2013 02:26 PM

    மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் மேற்படி கிராமங்கள் செவிலி தாயின் பிள்ளைபோல் பின் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் இந்த முயற்சிக்கு வித்திட்டவருக்கு அவசியம் நன்றி சொல்ல வேண்டும். நன்றி, நன்றி, நன்றி..........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .