2026 மே 04, திங்கட்கிழமை

பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட திட்டமில் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள கோட்டக்கல்வி பணி;ப்பாளர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இப்பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைகள், மாணவர்களின் விளையாட்டு, கல்வி முன்னேற்றம் போன்றவைகள் தொடர்பாக ஆரயாப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .