2025 மே 05, திங்கட்கிழமை

நூலகமும் கற்கை நிலையமும் திறந்துவைக்கப்பட்டன

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப் பகுதியில் சிறுவர்களுக்கான நூலகமும் கற்கை நிலையமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த றெயின்போ பிறிட்ச் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த நூலகத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரான்ஸ் றெயின்போ பிறிட்ச் நிறுவனத்தின் பணிப்பாளர்  சென்றஸ்,  சுவீடிஸ் கூட்டுறவு நிறுவனத்தின் இணைப்பாளர் ரி.மயூரன், மட்டக்களப்பு இருதயபுரம் மியானி நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எஸ்.இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X