2025 மே 05, திங்கட்கிழமை

மது பாவனையை தடுப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், சமுர்த்திப் பயனாளிகளுக்கு மதுபானப் பாவனையை தடுப்பதற்கான ஆத்மீக விழிப்புணர்வு செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் காத்தான்குடி சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியேகாத்தர் எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ.குணரட்னம், வலய முகாமையாளர் ஏ.எல்.சுல்மி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுபானப் பாவனையை தடுப்பதற்கான ஆத்மீக விழிப்புணர்வு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் வழிகாட்டலிலும் சமுர்த்தி அதிகார சபையின் சுற்றுநிரூபத்திற்கமைய இந்;த விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X