2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த செவ்வாயக்கிழமை நடைபெற்ற ஏறாவூர் நகர சபை கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேயவிக்ரமவிடம் புதன்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாக ஏறாவூர் நகர சபை தலைவர் அலிஸாஹீர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரின் நடவடிக்கைகளினால் வலயம் பின்னடைவை நோக்கிசென்று கொண்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .