2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன. 

ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டின் கீழ், முறக்கொட்டாஞ்சேனை மீன்பிடி சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது 34 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதற்காக சுமார் 3 இலட்;சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முறக்கொட்டாஞ்சேனை மீனவர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண மீன்பிடிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X