2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அரச உத்தியோகத்தர்களுக்கு உபகாரக் கொடுப்பனவுகள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,-எஸ்.பாக்கியநாதன்


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான உபகாரக் கொடுப்பனவுகள் நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளன.

உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 119 அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உபகாரக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட கொடுப்பனவாக ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா படி கொடுப்பனவுப் பத்திரம் வழங்கப்பட்டது.

இதற்காக 48.5 மில்லியன் ரூபா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 9.7 மில்லியன் ரூபா முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X