2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் போலியான கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (24) கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் பயிற்சிக்காக மரத்தினால் செய்யப்பட்ட போலியான கைக்குண்டு என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள கொக்குவில் இந்து மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை மர்மப்பொருள் ஒன்று கிடப்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வருகை தந்த விசேட குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் அதை ஆராய்ந்த போது பயிற்சிக்காக மரத்தினால் செய்யப்பட்ட போலியான கைக்குண்டு என தெரிவித்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .