2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை

Super User   / 2013 நவம்பர் 25 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவையொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இடம்பெயர் சேவை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோரும் இடம்பெற்று வருகின்றன.

இதன் அடிப்படையிலேயே ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்கான நடமாடும் சேவை இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.எம்.அன்சார், ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவை அலுவலர்கள், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் கபே நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.

மனித உரிமைகள் ஆய்வு நிலையம் மற்றும் கபே நிறுவனம் ஆகியன ஆளடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் இடம்பெயர் சேவைக்கு நிதி அனுசரணை வழங்குகின்றன.புகைப்பட பிடிப்பு சேவையும் முத்திரை கட்டணங்களும் மேற்படி நிறுவனங்களினால் இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலை எட்டு 8 மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள எட்டு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 480 விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக கபே நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ.ஹுஸைன் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .