2025 மே 01, வியாழக்கிழமை

விபத்து: மூவர் காயம்

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு மட்டக்களப்பு - திருமலை வீதியில் புதன்கிழமை காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கில் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக    ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பிரதேச செயலகத்தில் கடமைப்புரியும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவரும் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .