Suganthini Ratnam / 2015 மார்ச் 01 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் கூழாவடி பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் கூழாவடி முதலாம் குறுக்கைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கூழாவடி முதலாம் குறுக்கு வீதியிலிருந்து கூழாவடி பிரதான வீதிக்கு பயணித்துக்கொண்டிருந்த இந்த சிறுவர்களின் சைக்கிளும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, இரண்டு சிறுவர்களில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானார். மற்றைய சிறுவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
43 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago