Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kanagaraj / 2015 மே 05 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனையில் வைத்து அலைபேசி திருட்டுக்கள் தொடர்பில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி செங்கலடியிலுள்ள அலைபேசிக் கடையொன்றிலிருந்து 3 இலட்சத்து 9 ஆயிரத்து 850 ரூபாய் பெறுமதியான பல அலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன.
இது தொடர்பாக தொடர்ந்தும் புலனாய்வு செய்து வந்த பொலிஸார் தன்னாமுனை வாசியான தச்சு வேலை செய்யும் தேவநாயகம் சுதர்ஷன் (வயது 35) என்பவரை திங்களன்று (04.05.2015) மாலை வேளையில் கைது செய்தனர்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகுதி அலைபேசிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினர்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மேற்படி நபரை தாம் கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
1 hours ago