2025 ஜூலை 09, புதன்கிழமை

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டது

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்,எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் அலியார்வட்டைப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களை செவ்வாய்க்கிழமை (05) கைப்பற்றியதாக தெரிவித்த வெல்லாவெளி பொலிஸார் இதனுடன் சம்பந்தப்பட்ட நபரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அலியார்வட்டை பிரதேசத்தை சுற்றிவளைத்த போதே, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவருக்கு எதிராக, எதிர்வரும் 11ஆம் திகதி  நீதவான் நீதிமன்றில் தாக்கல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .