2025 மே 17, சனிக்கிழமை

வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 மே 07 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியலாய மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்கென ஐந்து வருட திட்டத்துக்கு சுமார் 22 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டதுடன், இக்குறித்த  வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (06) கல்குடா கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ரவி தலைமையில் சித்தாண்டி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது வறிய மாணவர்களுக்கான ஒருதொகுதி கற்றல் உபகரணங்களை சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாலரும் சமூக சேவையாளருமான கே.துரைநாயகம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கல்குடா கல்வி வலய உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .