2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அச்சுறுத்தலுக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம்

Freelancer   / 2022 நவம்பர் 29 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

பொத்துவில் வைத்தியசாலை வைத்தியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராகவும்  வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் இன்று (29) கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியர்கள் இணைந்து இந்த போராட்டத்தினை
முன்னெடுத்தனர்.

“பொத்துவில் வைத்தியசாலையின் வைத்தியர்களின் உயிர் அச்சுறுத்தலுக்கு எதிராக நாம், நாங்கள் பொத்துவில் வைத்தியசாலையுடன்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அங்கு கடமையாற்றும்  வைத்தியர்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவருவதாகவும் அங்கு
வைத்தியர்கள் சுமுகமான சூழ்நிலையில் கடமையாற்றமுடியாத நிலைமை காணப்படுவதாகவும்
இங்கு வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .