2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அடித்து கொன்று சுட்டுப் போட்டான்கள்’: தாய் கதறல்

Editorial   / 2021 ஒக்டோபர் 01 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு  சுட்டுப் போட்டான்கள் இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும்  படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார் கதறியழுதார்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவர் மேற்கொண்ட துப்பாகி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலின் வழக்கு விசாரணை இன்று (01) நடைபெற்றது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ.தியாகேஸ்வரன் முன்னிலையில்  இன்று வெள்ளிக்கிழமை (01) எடுக்கப்பட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்காக படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தந்தையான வேலுப்போடி மகாலிங்கம், தாயாரான மா.. சின்னப்பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர். 

ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போது மட்டக்களப்பு பொலிஸார் பாக்க மாட்டினம் இதனை சிஜடி யிடம் கொடுக்குமாறு நீதவான் தெரிவிக்கின்றார். ஆனால், அதற்கு பொலிஸார் ஒரு பதிலும் கொடுக்கின்றார்கள் இல்லை. இந்த ஓட்டோ காரன்தான் எனது பிள்ளையை கொலைக்கு கொடுத்தவன் அவனுக்கு  எல்லாம் தெரியும் அவனை பிடிக்கவேண்டும். 

எனது மகன் படுகொலை செய்யப்படு இன்று 100 நாட்கள் கடந்துள்ளதாகவும் 8 ஆவது தடவையாக வழக்கு தவணை போகின்றது பொலிஸார் ஒன்றும் தெரிவிக்கவில்லை எறாவூர் பொலிசார் தலைமையில் விசாரணை இடம்பெறுகின்றது .

அவர்கள் பணக்கார் அரசியல்வாதி நாங்கள் ஏழைகள் என்பதால் எதுவும் நடக்கவில்லை இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா எனது மகனின் படுகொலைக்கு நீதிவேண்டும் என படுகொலை செய்யப்பட்வரின் தாயாரான மகாலிங்கம் சின்னப்பிள்ளை கண்ணீர்மல்க தெரிவித்தார். 

இ​​தேவேளை கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார். அதனையடுத்து அவரது மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .