2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இவ்வாண்டு மாகாண சபை தேர்தல் நடைபெறும்

Editorial   / 2022 ஜனவரி 12 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துரைத்த அவர், “உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடப்பட்டமையானது, நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

“ஆனால், தேர்தலுக்கு அச்சப்பட்டு அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் மக்களின் நிலையைக்கொண்டே இந்த நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது. இந்த நிலைமை சுமுகமானதும் நிச்சயமாக விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறும்.

“எனினும், மாகாண சபைத் தேர்தல் வருடக்கணக்கில் பிற்போடப்படும் என்று எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. எனவே, இந்த வருட நடுப் பகுதியில் அல்லது இறுதிப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று நான் கருதுகின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .