ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 ஜனவரி 06 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், 07 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் 07 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், கரடியனாறு பொலிஸ் பிரிவு நிர்வாகத்தின் கீழ் வரும் புத்தம்புரி எனும் காடும் ஆறும் சார்ந்த பகுதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்று மறைந்திருந்த விசேட அதிரடிப்படையினர், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு, மணல் ஏற்றிய நிலையில் உழவு இயந்திரங்களையும் கைப்பற்றி, கரடியனாறு பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களையும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களையும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
18 minute ago
37 minute ago
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
46 minute ago
51 minute ago