Freelancer / 2022 ஜூலை 05 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான
மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வன் குளோரியன் ஹேமேந்திரா அவர்கள் தேசிய ரீதியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த ஜூன் 28ஆம், 29 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இப்போட்டிகள் இடம்பெற்றன.

சிறு வயது முதல் விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் 15 வயதான செல்வன் குளோரியன் ஹேமேந்திரா நீச்சல், கூடைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளிலும் திறமை பெற்றவர் என்பதுடன் விளையாட்டுத் துறையில் பல்வேறு
சான்றிதழ்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago