Freelancer / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இன்று காலை நீர் குழி ஒன்றில் விழுந்து நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டம் ஒன்றில் வெட்டப்பட்டிருந்த நீர் குழி ஒன்றில் தவறி விழுந்தத குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
மரணமடைந்த நபர் கும்புறுமூலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய உதிஸ்கரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025