Freelancer / 2023 ஜூலை 23 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை (21) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எச்.எம்.முகம்மது பஸீவ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காத்தான்குடி மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .