2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் 2 பெண்கள் கைது

Editorial   / 2022 ஏப்ரல் 23 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டு. வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், ஜஸ் போதைப் பொருளுடன் மற்றுமொரு பெண்ணும் நேற்று (22) வெள்ளிக்கிழமை செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்து  23 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒனறினையடுத்து சம்பவதினமான நேற்றிரவு வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் பிறைந்துறைச்சேனையில் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து  குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டபோது ஜஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்தனர் 

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .