2024 மே 14, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் மரணம்; மூவர் ஆபத்தான நிலையில்...

Freelancer   / 2023 ஒக்டோபர் 07 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்த நிலையில், மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் 2 மணியவில் இடம்பெற்றது.

இதன்போது ஒலுவில் வெளிச்சம் வீட்டுக்கு அருகாமையில் வீச்சு வலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்துக்குள்ளனர்.

ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் நிஜாமுதீன் (34) ஸ்தலத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.

மின்னல் தாக்கத்துக்குள்ளன ஏனைய மூவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X