Editorial / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் புதன்கிழமை (27) மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் லொறிசாரதியை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தம்பிலுவில் பிரதான வீதி வீ.சி. வீதிக்கு அருகில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறிசாரதியை கைது செய்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago