Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
விபத்துச் சம்பவமொன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அனுமதியளித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் விடுதிக் கட்டடத்துக்கு முன்பாகவுள்ள மஞ்சள்; கோட்டுக் கடவை ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட இரண்டு யுவதிகள் மீது பொலிஸாரின் வாகனம் மோதியதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.
புதன்கிழமை (8) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது. மேற்படி வாகனத்தைச் செலுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தரைப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
மேலும், படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர்; செலுத்திய வாகனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு, ஊறணியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் எனவும் அவ்வாகனத்தையே அப்பொலிஸ் உத்தியோகஸ்தர் புதன்கிழமையும் செலுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
;
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago