Janu / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து அங்கிருந்த சொட்கன் துப்பாக்கியொன்று மற்றும் ஜல்லர் இயந்திரம் உட்பட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் சனிக்கிழமை (03) அன்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை - கொழும்பு வீதியின் புனாணை பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தில் கடமையாற்றி வருபவர்கள் வழமைபோல வெள்ளிக்கிழமை (02) மாலை கடமைகளை முடிந்ததும் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று அடுத்த நாள் (சனிக்கிழமை - 02) காலை காரியாலயத்திற்கு வந்தபோது அங்கு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு காரியாலயத்துக்கு உள் நுழைந்து அங்கிருந்த சொட்கன் துப்பாக்கி ஒன்று அதற்கான 3 தோட்டாக்கள், துளை கருவியான ரில்லர் ஒன்று, எரிவாயு அவன் ஒன்று ஆகிய பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .