2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

50 அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து

Kogilavani   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

மட்டகளப்பு பாசிக்குடாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற காரொன்று, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, செனன் - வூட்லேண்ட் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பயணித்தாகவும் இவர்கள் இவ்வித ஆபத்துமின்றி தப்பிகொண்டதாகவும் பொலிஸார் கூறினார்.
மேற்படி குடும்பத்தினர், மட்டக்களப்பு பாசிக்குடாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு விட்டு வீடு திரும்பும்போதே இவ்விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மலையகத்தில் மாலை வேளைகளில் கடும் மழைபெய்வதுடன் அதனால் பிரதான வீதிகள் வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .