2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'ஹசிஸ் புரம்' மக்களிடம் கைளிப்பு

Sudharshini   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, கு.புஸ்பராஜ்

பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் அக்கரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள 'ஹசிஸ் புரம்' நேற்று (14) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப-தலைவருமான பழனி திகாம்பரம், அக்கரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்கு இந்த வீடுகளை கையளித்தார்.

இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரண்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .