2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்

A.P.Mathan   / 2010 நவம்பர் 26 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி தித்தபஜ்ஜல வைத்தியசாலையில்  இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு கண்டி - குருணாகல் வீதியில் விழ்ந்திருந்த ஒருவரை பொலிஸார் முன்வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்ததாகவும் அவரை யார் என்பதை அடையாலம் காண முடியாது உள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

நடுத்தர வயதுடைய இவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்கு உறவினர்களை முன்வருமாரும் பொலிஸார் வேண்டிக்கொள்கின்றனர். இது சம்பந்தமான விபரங்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் 0812 499222 என்ற தொலைபேசி மூலமும் வினவலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .