2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

குழவிக்கல்லால் தாக்கி தந்தை படுகொலை; பன்விலயில் கொடூரம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

குழவிக்கல்லால் தந்தையின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு மகன் பொலிஸில் சரணடைந்த சம்பவமொன்று இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பன்வில பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட மடுல்கலை, கல்கொட கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கந்தையா (வயது 64) என்பவரே கொல்லப்பட்டவராவார். வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரிக்கவே குழவிக்கல்லை எடுத்து வந்த மகன் தந்தையின் தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து மகன் பன்வில பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X