2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாணவர்கள் இருவரும் சடலங்களாக மீட்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மகாவலி கங்கையில் அடித்துச்செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணமல்போன மாணவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியாவ கலைமகள் வித்தியாலத்தில் ஆண்டு 10 இல் கல்வி பயிலும் திலீபன்(15), ஆண்டு 11 இல் கல்வி பயிலும் கோகுலன்(16) என்ற இரு மாணவர்களே கங்கையில் மூழ்கி காணாமல் போயினர்.

அவ்விருவரையும் தேடும் பணிகளை கடற்படை சுழியோடிகள் நேற்று மாலையிலிருந்து மேற்கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணியளவில் அவ்விருவரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம் மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை     கோவில் பூசாரியுடன் கருமகாரியத்திற்கு உதவிக்காக மஹாவலி ஆற்றுக்குச் சென்றுள்ளனர்.

கருமத்தில் ஈடுபட்டிருந்த போது கங்கை நீரின் வேகம் அதிகரித்ததால் அவ்விருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

சடலங்களான மீதான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை திடீர் மரணவிசாரணை அதிகாரி மேற்கொண்டுவருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .