2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தொலைபேசியில் உரையாடிவாறு பயணித்தவர் ரயில் விபத்தில் காயம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரஞ்சன்

கையடக்கத் தொலைபேசியில் உரையாடியவாறு ரயில்பாதையில் பயணித்தகொண்டிருந்த ஒருவர் சரக்கு ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம், ஹட்டன் ஹஜந்தா ரயில்வே கடவையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், ஹட்டன் ரொத்தர்ஸ் கொலனியை சேர்ந்த கிருஷ்ணன் (51 வயது) என்பவரே காயமடைந்துள்ளார்.

இவர் ஆபத்தான நிலையில் டிக்கோயாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .