2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சதொச நிலையத்தில் கொள்ளை

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரிஃபாத்

கண்டி தென்னக்கும்புர நகரிலுள்ளகூட்டுறவு மொத்த விற்பனை நிலையமொன்றில் சுமார் ஏழரை இலட்சம் ரூபா பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்றில் வந்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத குழுவொன்று கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதுடன் அங்கிருந்த சுமார் ஏழு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கண்டி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .