Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஜூலை 06 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சேனாதிராஜா
ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மெதுவாக பணி செய்யும் போராட்டத்தை இன்று திங்கட்கிழமை முதல் முன்னெடுத்துள்ளனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் நான்காம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை இன்று திங்கட்கிழமை(6) முதல் முன்னெடுப்பதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்நிலையிலே இப்போராட்டம் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கமைவாக, கோம்பர, கலாபெக்க, அலகொல, ஆக்கல, கல்பீல, கோம்பர, மடுல்கெல, சென்ஜோன்ஸ் மற்றும் வெள்ளிமலை போன்ற தோட்டங்களில் தொழில் புரியும் தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுவாக கொழுந்து பறிக்குமொருவர் ஒரு நாளைக்கு 18 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறிக்கவேண்டும் என்பதே நிபந்தனையாகும். ஆனால், மெதுவாக பணி செய்யும் போராட்டத்தின் அடிப்படையில், ஒரு நாளைக்கு 5 அல்லது 6 கிலோகிராம் தேயிலை கொழுந்து மாத்திரமே பறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .