2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி

Freelancer   / 2022 டிசெம்பர் 03 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா

ஹட்டன் - நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகேகொடையில் இருந்த வெலிமடைக்குச் செல்வதற்காக வந்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

வேகக்கட்டுப்பாடின்மையே இவ்விபத்துக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துள்ள நிலையில் உயிர்சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கும் ஹட்டன் பொலிஸார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .