2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

27 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

தெஹியோவிட்ட வனவிலங்குக் காரியாலயத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில், ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, 27 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டு விலங்குகளை வேட்டையாடியமை, அனுமதியின்றி மரங்களை வெட்டியமை, சட்டவிரோதமாக மரக்குற்றிகளைக் களஞ்சியப்படுத்தியமை, காட்டுக்கு தீ வைத்தமை உள்ளிட்ட பல குற்றங்களுக்காக மேற்படி 27 பேருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக, ருவான்வெல்ல, அவிஸ்ஸாவளை ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளினூடாக, 295,000 ரூபாய் அபராதத்தொகையாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .