2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

8,000 ரூபா மாத்திரமே வழங்கியதாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசனம்

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

தீபாவளி பண்டிகை முற்பணமாக 10,000 ரூபா வழங்கபட வேண்டுமென  கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், தமக்கு 8,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மலையக அரசியல்வாதிகள் இது குறித்து ஏன் கவனம் செலுத்துவதில்லை என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அதிலும் சில தொழிலாளர்களுக்கு பழைய கடன் தொகை கழிக்கப்பட்டு 6,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே தீபாவளி பண்டிகைக்கு முன்னர் மிகுதி தொகையினை வழங்குமாறும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .