2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அடையாளத்தை மாற்ற கோரி போராட்டம்

Janu   / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மாதம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட உள்ள குடிசன மதிப்பீட்டு  நிரப்பப்படும்  படிவத்தில்,  இதுவரை கூறி வந்த இந்தியா வம்சாவளி என்ற அடையாளத்தை மாற்றி மலையக தமிழர் என குடிசன மதிப்பீட்டில் பதிவு செய்ய வேண்டுமென கோரி சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து நுவரெலியா  தபால் நிலையத்துக்கு  முன்பாக   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டம்  செவ்வாய்க்கிழமை  (20) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு  பிரதான வீதியில் மூன்று மணி நேரம் இடம்பெற்றுள்ளதுடன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள்  நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு சென்று செயலாளரிடம் மனு ஒன்றிணையும் கையளித்துள்ளனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக அமைப்புகள்,  பொதுமக்கள்,  சிவில் அமைப்புகள் என்பன  பங்கேற்றுள்ளதுடன்  சுற்றுலா பயணிகளும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துவாரக்ஷான் ,செ.திவாகரன் , டி.சந்ரு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X