எம். செல்வராஜா / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாக்குதல் சம்பவமொன்றையடுத்து, பதுளை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணி வகுப்பில், சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்கு, தாக்கப்பட்டவர் சமூகம் அளிக்காதமையால், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நாளை (02) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பதுளை அரசினர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர், அதே வைத்தியசாலையில் ஊழியராக கடமையாற்றி வந்தவரால் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட வைத்திய நிபுணர், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தாக்கி சந்தேக நபரை, பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், விளக்கமறியலில் இருந்து வருபவரை, அடையாளம் காணும் வகையில், அடையாள அணி வகுப்பொன்று, நீதிபதியின் உத்தரவின் பேரில், நேற்று (30) நடத்தப்பட்டது.
எனினும், சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்கு, வைத்திய நிபுணர், நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. இதையடுத்தே, சந்தேக நபரை 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago