2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அதிபர் கரியாலயம் பூட்டப்பட்டமையால் ஆசிரியர்கள் அவதி

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன், கல்வி வலயத்துக்குட்பட்ட ஆரம்பப் பாடசாலையொன்றில் அதிபர் காரியாலயம் பூட்டப்பட்டமையால் இன்று வெள்ளிக்கிழமை கடமைக்கு வந்த ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் அதிபர் விடுமுறையில் சென்றுள்ளதால், பதில் அதிபரே பாடசாலையின் நிர்வாகத்தை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் பாடசாலையின் பதிலதிபர்   பாடசாலைக்கு இன்று(17) சமூகமளிக்க தவறியமையினால், அதிபர் காரியாலயம் திறக்கப்படவில்லையென்றும் ஆசியர்களின் வரவு பதிவு போன்ற விடயங்களை முனேனெடுக்க முடியாத பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

எனினும் மாணவரின் நலன் கருதி அசௌகரியங்களுக்கு மத்தியில்  கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .