2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 1,259 மாணவர் தொடர்ந்தும் கூடாரங்களில்

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 1,259 மாணவர் , தொடர்ந்தும் தற்காலிக கூடாரங்களிலே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 49 கூடாரங்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில்  5 வயதுக்கும் குறைந்தவர்கள் 370 பேர் உள்ளளனர்.   16 மாணவர் தந்தையை இழந்துள்ளதோடு,  4 மாணவர்  தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவருக்கு சீருடைகள், பாதணிகள், பேக் மற்றும் பாடசாலை உபகரணங்கள்  உட்பட உலருணவு பொருட்கள் என்பவற்றை    கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத் புதன்கிழமை(15) வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .