Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நுவரெலியா மாவட்டத்தில், அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் பிரிக்கப்பட்டு ஆறு புதிய பிரதேச சபைகளாக உருவாக்கப்படவுள்ளன. இது, தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்” என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஆறு பிரதேச சபைகளை ஏற்படுத்துவதற்கு, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
“இதற்கேற்ப அம்பகமுவ பிரதேச சபைகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா எனும் பிரதேசசபைகளாகச் செயற்படவுள்ளன. நுவரெலியா பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு கொட்டகலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா எனும் பிரதேச சபைகளாகச் செயற்படவுள்ளன.
“இந்தப் புதிய பிரதேச சபைகளுக்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்காக முழு வீச்சுடன் செயற்பட்ட அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் பீட உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago